வழிகாட்டியாக விளங்கிய நட்சத்திரம்
விளையும் பயிரை முளையில் தெரியும் என்பார்கள். எனது அம்மா சுகவீனமுற்றிருந்தபோது
தாமாகவே முன் வந்து யாழ் வைத்தியசாலையில் எனது துணைவியாருக்கு மாற்றுத்
துணையாக நின்ற கௌரிசங்கரி பின்னர் பாதிப்புற்ற பலருக்கு சட்டத்துறையில் உதவிய ஒரு
நட்சத்திரம். யேசு பிறந்த போது வழிகாட்டியாக விளங்கியது நட்சத்திரமே. அந்த வழிகாட்டி
இன்று இல்லை. அன்றே துடுக்குடனும் மிடுக்குடனும் கர்சித்தது இன்றும் காதுக்குள்
ஒலியாக மட்டுமே உள்ளது. என் செய்வோம். அவரது ஆன்ம சாந்தியாக வேண்டும்
சிறிமாமா ஞானம் அக்கா