தமிழ் மக்களின் விடுதலைப் பாதையில் பலமான உதவிக்கரம்

சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் மறைவு விடுதலைக்காகப் பயணிக்கும் தமிழினத்துக்கு மற்றுமொரு பேரிழப்பாகும். தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளைத் தலைவரானஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் மனைவியான கௌரி சங்கரி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் யுவதிகளின் விடுதலைக்காகத் தொடர்ச்சியாக ஈடுபாட்டோடு போராடி வந்துள்ளார். பல வழக்குகளில் அவர்களுக்காக ஆஜராகியுமுள்ளார். குறிப்பாகப் பெண்கள் சிறுவர்கள் விடயத்திலும் அவர்களது உரிமைசார்ந்த விடயங்களிலும் அவர் அர்ப்பணிப்புடன் போராடியுள்ளார். தமிழீழ விடுதலைக்கழகத்திற்கும் அவரது ஆதரவுக் குரல் பிரச்சினைகளின் போது ஒலிக்கத்தவறியதில்லை. தமிழ் மக்களின் விடுதலைப் பாதையில் அரசியல் சமூகப் பொருளாதார ரீதியிலும் அவரது பலமான உதவிக்கரம் இருந்தே வந்துள்ளது. கௌரி சங்கரியின் மறைவின் இடைவெளி இனி அப்படியேதான் இருக்கும்.

சித்தார்த்தன்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்.
பாராளுமன்ற உறுப்பினர்.