ஒடுக்கப்பட்ட மக்களுக்காக துணிச்சலுடன் செயற்பட்ட வீரப்பெண்மணி

பல தசாப்த காலத்திற்கு மேலாக தனது சேவைபெறுநர்களின் சிரமமான வழக்குக்களை அச்சமின்றி எடுத்து தைரியத்துடன் நிமிர்ந்து நின்ற எமது நண்பரான சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா இப்போது எம் மத்தியில் இல்லை. அரசின் அதி பலத்திற்கு அஞ்சாது துணிச்சலுடன் அடிக்கடி சவாலாக எழுந்து நின்று பல தசாப்த காலமாக கடினமான வழக்குக்களை துணிகரமாக முன்னெடுத்தவருமான எமது சகோதரி சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா தவறிவிட்டார். தனது சேவை பெறுநர்களுக்காக சளைக்காது போராடிய வீரப்பெண்மணி அவர் ஜனவரி 1997 ஆம் ஆண்டு ஒருநாள். நான் சட்டமாஅதிபர் திணைக்களத்திலிருந்து விலகி சிலநாட்களில் எனக்குத் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அழைத்தவர் திருமதி கௌரிசங்கரி தவராசா. நான் திணைக்களத்திலிருந்து விலகிவிட்டதாகவும் எனக்கு வேலை கொடுக்கும்படி சிரேஷ்ட சட்டத்தரணி திரு. அமீன் கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சந்தேகநபர் முன்னிலைப்பட தவறியதால் பிணையாளி ஒருவர் சிறையிலடைக்கப்படக் கூடிய ஒரு வழக்காகும். கடுகடுப்பான மேல்நீதிமன்ற நீதிபதிமுன் ஆஜராக வேண்டி இருந்தது. அந்த வழக்கில் பிணையாளி சார்பாக என்னை ஆஜராகும்படி வேண்டிக்கொண்டத யடுத்து நான் வாதாடி பிணையாளியைக் காப்பாற்றினேன். அன்றிலிருந்து அவர் பல வழக்குகளில் என்னை அமர்த்தினார். இவ்வாறு எனது வளர்ச்சிக்கு ஆதரவளித்தார். அவர் மூலம் தவா அறிமுகமானார். உயர் பதவிகளில் இருந்தவர்கள் பலர் அவருக்கு நண்பர்களாக இருந்தார்கள். இருப்பினும் அவர் தனது வழியில் சென்று எதிர்பார்ப்பு எதுவுமின்றி வலிந்து பலருக்கும் உதவுவார். அவரது நண்பர்கள் நிலைதாழும் போது அவர் அவர்களுக்காக அங்கிருந்தார். அவர் பதவியில் இருப்பவர்களுக்காக அல்லாது அவர்கள் பதவியில் இல்லாத போதும் வீழ்ந்த போதும் அவர்களுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றியதை நான் பார்த்துள்ளேன் அவர் சில சமயங்களில் சர்ச்சைக்குறிய மற்றும் சிரமமான வழக்குகளில் ஆஜராகுவார். அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நின்றார். அவர்களில் சிலர் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் அவர் வழக்கைப் பொறுப்பேற்கத் தீர்மானித்துவிட்டால் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு சாத்தியமான அனைத்தையும் செய்தார். அவர் மரண தண்டணைக்கு சவால் விடுப்பது உள்ளடங்களாக பல மனித உரிமைகள் வழக்குக்களை தனது நேரத்தையும் வளங்களையும் அர்பணித்து வழிநடத்தியிருந்தார் அவரது இழப்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உணரப்படும்.

எமது நண்பர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்

.
சாலிய பீரிஸ்
ஜனாதிபதி சட்டத்தரணி
தலைவர்- இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்