வீர அன்னையின் வீழாப் புகழோடு

குற்றவியல் சட்டக்கோவை கண்ணீர் சிந்தியது
நீங்கள் நீதி மன்றம் செல்வதை நிறுத்திய போது
ஏமாற்றத்தில் எரிமலையாய் குமுறுகிறதெம் இதயம்
வெஞ்சமரில் வீழ்ந்து மடிந்தோம்
விதிவசத்தால் உறுப்பிழந்து மீதமானோம்
வீணர்களின் சூழ்ச்சியதால்
வெஞ்சிறையில் வீழ்ந்தோம்
இழப்பதற்கேதுமற்ற இடர்மிகு காலமது
அன்னை சங்கரி சதிகளின் சங்கறுத்து
நீதிக்காய்ப் போராட நாம் வாழ்வு மீண்டோம்
அவர்தம் திறமையின் பொருட்டாலே
கொடிய காலன் கொடுங்காலத்தில்
காவுகொண்டான் உங்களை அம்மா
நிலையற்ற மானுடவுடல் மறைந்திட
நிலைப்பெற்று நிற்கிறதும் நினைவுகள்
வீர அன்னையின் வீழாப் புகழோடு
இதயத்தின் ஆழத்தில்

நா. சத்தியமூர்த்தி
பிரதித் தலைவர்
தந்தை செல்வா நற்பணி மன்றம்.