அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அர்ப்பணிப்போடு செயற்பட்டவர் திருமதி கௌரி சங்கரி தவராசா

அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் போன்றவற்றினால் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகளின் விடுதலைக்காகவும் அரசியல் கைதிகள் விடுதலைக்காகவும் நீண்ட காலமாக அர்ப்பணிப்போடு செயற்பட்டு வந்தவர் சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசா அவரது மரணம் தமிழ் மக்களுக்குப் பாரிய இழப்பாகும். இவரின் இழப்பு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நம்பி இருந்தவர்களுக்கு மிகப் பெரிய சவாலை விட்டுச் சென்றுள்ளது. ஆள் கடத்தல் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் அரசியல் படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்காக உயர் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பேசப்பட்ட ஒரு பிரபல சட்டத்தரணி ஆவார். என்னை அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்தபோது எனது விடுதலைக்காக நீதிமன்றத்தில் வாதாடி என்னை பிணையில் செல்ல அனுமதி பெற்றுத் தந்தவர் அவரின் இழப்பை ஈடு செய்ய முடியாத நிலையில் நாம் உள்ளோம்.

செல்வம் அடைக்கலநாதன்
தலைவர் – தமிழ் ஈழ விடுதலை இயக்கம்.
பாராளுமன்ற உறுப்பினர்.